Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிகளில் மறைந்து வாழும் நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்க கடந்த 2016-ம் ஆண்டில் மாவட்ட ரிசரவ் படையை (டிஆர்ஜி) சத்தீஸ்கர் அரசு உருவாக்கியது.
கடந்த 4-ம் தேதி சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் டிஆர்ஜி வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் லட்சுமிகாந்த் என்ற வீரர் உயிரிழந்தார். இவர் மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர்.
"தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமிகாந்த் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். அவரது குடும்பத்துக்கு வீடு வழங்கப்படும்" என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT