Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

திருப்பதி உண்டியல் வசூல் ரூ.90 கோடி

திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் 14.41 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து உள்ளனர். இவர்கள் மூலம் உண்டியலில் ரூ. 90.45 கோடி காணிக்கை செலுத்தப் பட்டுள்ளது. 76.61 லட்சம் லட்டு பிரசாதங்கள் கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 21 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

அலிபிரி மலையடிவாரத்தில் ’மல்ட்டி கார் பார்க்கிங்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதன் மூலம் வாகனங்களை நிறுத்த பக்தர்கள் அவதிப்பட தேவையில்லை. இவ்வாறு ஜவஹர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x