Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு கடந்த 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தியும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். தடுப்பூசி போட்ட செவிலியர் பி.சி.ரம்யாவுக்கு நன்றி. முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும் இந்தியாவில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x