Published : 26 Feb 2021 03:24 PM
Last Updated : 26 Feb 2021 03:24 PM

2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்பாடு பணி காரணமாக பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிட் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி, மார்ச் 1ம் தேதியிருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட, இதர உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதற்காக கோவிட் 19 தடுப்பூசி போடப்படுவதை கண்காணிக்கும், கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்படுகிறது.

கோவின் 1.0-விலிருந்து கோ-வின் 2.0-வுக்கு மாறுவதால், வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (பிப்ரவரி 27 மற்றும் 28) தேதிகளில் கோவிட்-19 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடக்காது. இந்த மாற்றம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x