Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

தனது உருவத்தை ஓவியமாக வரைந்த துபாய் சிறுவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தனது ஓவியத்தை வரைந்த துபாயைச் சேர்ந்த சிறுவனுக்கு பிரமதர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சிறுவன் சரண் சசிகுமார் (14) தனது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார். 9-ம் வகுப்பு படித்து வரும் சரண், பிரதமர் மோடியின் உருவத்தை ஸ்டென்சில் ஓவியமாக வரைந்துள்ளார். அதனை, மத்திய அமைச்சர் வி.முரளீதரன் மூலமாக பிரதமர் மோடிக்கு அண்மையில் அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து மகிழ்ந்த மோடி,அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "நமது எண்ணங்களை யும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சிறந்த கருவியாக ஓவியம்அமைந்திருக்கிறது. நீங்கள் வரைந்துள்ள ஓவியமானது, ஓவியத்தின் மீது நீங்கள் வைத்துள்ள அர்ப்பணிப்பையும், நாட்டின் மீதான அன்பு, பாசம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறது. இனி வரும்காலங்களில், உங்களது திறமையை இன்னும் அதிக தூரத்துக்கு கொண்டு செல்வீர்கள் எனஎதிர்பார்க்கிறேன். இன்னும் அழகான ஓவியங்கள் வரைய வேண்டும், அதே நேரத்தில் கல்வி யில் சிறந்து விளங்க வேண்டும். சிறப்பான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரண் கூறும்போது, “பிரதமரின் பாராட்டானது,என்னைப் போன்ற கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x