Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
இந்தோ-திபெத் எல்லையோர போலீஸ் (ஐடிபிபி) டிஜிபி எஸ்.எஸ். தேஸ்வால் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இதைத் தொடர்ந்துஐடிபிபி சார்பில் நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான கரோனாசிகிச்சை மையம் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள சர்தார் வல்லபபாய் படேல் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.
இங்கு அதிக அளவில் படுக் கைகள் தயார் செய்யப்பட்டு கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவும், பகலும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கினர்.
கடந்த 2 மாதங்களாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இங்கு வரவில்லை. தற்போது சிகிச்சை பெற்று வரும் 60 பேரும் அடுத்த வாரம் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
நோயாளிகளின் வருகை குறைந்ததையடுத்து அடுத்த வாரம் இந்த மருத்துவ சிகிச்சை மையம் மூடப்படவுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
வேறு யாராவது கரோனா சிகிச்சைக்காக வரும் பட்சத்தில் டெல்லியிலுள்ள மற்ற மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக் கப்படுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT