Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு பிஹார் அரசு ரூ.25 ஆயிரம் உதவி

பிஹாரில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். இதில் திருமணமாகாத பெண்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரமும் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூடப்பட்ட சர்க்கரை ஆலைகள், 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவைக்கு வெளியிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x