Published : 05 Nov 2015 09:01 AM
Last Updated : 05 Nov 2015 09:01 AM
பிஹாரின் பக்ஸார் தொகுதி பாஜக எம்.பி. அஸ்வினி குமார் சவுபே பாட்னாவில் நேற்று கூறும்போது, “பிஹார் தேர்தல் முடிவுகள் நவம்பர் 8-ம் தேதி வெளியான உடன் லாலு வும் நிதிஷ் குமாரும் பாகிஸ்தான் சென்றுவிட வேண்டும்” என்றார்.
“லாலுவும் நிதிஷும் பிஹாரை பாகிஸ்தானாக மாற்ற விரும்புகின்றனர்” என்று பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து அஸ்வினி குமார் சவுபே அதே வகையில் பேசியுள்ளார்.
இதற்கு முன் பாஜக தலை வர் அமித்ஷா பேசும்போது, “பிஹாரில் பாஜக தோல்வி அடைந்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT