Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

டெல்லி செங்கோட்டை வன்முறையில் மிகவும் தேடப்பட்ட மனீந்தர் சிங் கைது

கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் காவல் துறையினர் தாக்கப்பட்டது மற்றும் செங்கோட்டை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் மிகவும் தேடப்பட்டவர்களில் ஒருவரான மனீந்தர் சிங் என்கிற மோனியை (30) நேற்று கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41.1-ன் கீழ் மனீந்தர் சிங், பிதம்புராவில் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். ஸ்வரூப் நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து 4.3 அடி நீள இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவ நாளில் வன்முறையில் ஈடுபட்ட தேசவிரோத சக்திகளை உற்சாகப்படுத்தும் வகையில் மனீந்தர் சிங் இரு வாள்களை சுழற்றி நடனம் ஆடும் வீடியோ காட்சி அவரது மொபைல் போனில் இருந்தது. சிங்கு எல்லை போராட்டக் களத்தில் அவர் இருந்ததற்கான புகைப்படங்களும் இருந்தன. அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x