Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

தெலங்கானா முதல்வரின் பிறந்த நாள்: அம்மனுக்கு 2.5 கிலோ தங்கப் புடவை

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் 68-வதுபிறந்த நாளை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியினர் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர்.

மாநிலம் முழுவதும் 2.5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன. ரத்த தானம், அன்ன தானம், ஆலய வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் டிஆர்எஸ் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாச யாதவ் நேற்று ஹைதராபாத் பல்கம்பேட்டாவில் உள்ள எல்லம்பள்ளி அம்மன் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது 2.5 கிலோ எடையுள்ள தங்கப் புடவையை அவர் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார்.

பிரதமர் வாழ்த்து

சந்திரசேகர ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்தனை செய்வதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x