Published : 13 Feb 2021 02:55 PM
Last Updated : 13 Feb 2021 02:55 PM

‘‘சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகம்’’-  உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம்

உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி நேயர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பான அவர் தனது ட்வி்ட்டர் செய்தியில், “இனிய உலக வானொலி தின வாழ்த்துகள். அனைத்து வானொலி நேயர்களுக்கும் வாழ்த்துகள், புதுமையான படைப்புகள் மற்றும் இசையால் வானொலியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இது, சமூக இணைப்பை ஆழப்படுத்துவதற்கான ஓர் அருமையான ஊடகமாகும். தனிப்பட்ட முறையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியின் நேர்மறை தாக்கத்தை நான் உணர்கிறேன்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x