Published : 10 Feb 2021 12:27 PM
Last Updated : 10 Feb 2021 12:27 PM

கரோனா உயிரிழப்பு தொடர்ந்து குறைகிறது; இன்று 94 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 100-க்கும் கீழே குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,08,58,371 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,05,61,608 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 13,087 குணமடைந்துள்னர்.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,41,511 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 94 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,252 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் மொத்தம் 66,11,561 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x