Published : 08 Feb 2021 01:29 PM
Last Updated : 08 Feb 2021 01:29 PM

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,05,34,505 ஆக உயர்வு

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,08,38,194 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 11,904 குணமடைந்துள்னர்.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,48,609 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 84 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,080 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் மொத்தம் 58,12,362 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x