Last Updated : 08 Feb, 2021 11:51 AM

 

Published : 08 Feb 2021 11:51 AM
Last Updated : 08 Feb 2021 11:51 AM

மோடி அரசுக்கு நான்கு தொழிலதிபர் நண்பர்கள் தான் கடவுள்: ராகுல் காந்தி தாக்கு

ராகுல் காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் 2021 அறிக்கையில் கார்ப்பரேட்கள், கம்பெனிகள் என்ற வார்த்தைகள் 17 முறை இடம்பெற்றுள்ளதாக ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021 அறிக்கையை சமர்ப்பித்தார். மந்திய அரசின் பட்ஜெட் 2021ஐ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

குறிப்பாக பட்ஜெட் 2021ஐ அவர் நட்பு மைய பட்ஜெட் என்று அவர் குறிப்பிட்டு வருகிறார்.

பட்ஜெட் 2021 குறித்து ராகுல் காந்தி சமீபத்திய ட்வீட்களில் கூறியுள்ளதாவது:

"பட்ஜெட்டில் இந்திய ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்காகவோ அல்லது விவசாயிகளுக்காகவோ ஏதுமில்லை. மோடி அரசாங்கத்திற்கு 3-4 தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே கடவுளாக உள்ளனர்!

இந்த ஆண்டு தனது பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் பிரதமர் என்ற வார்த்தையையும் ஆறு முறை கூறியுள்ளார். அதைவிட கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள் என்ற வார்த்தைகளை 17 முறை பயன்படுத்தினார், ஆனால் பாதுகாப்பு மற்றும் சீனா என்று கூட குறிப்பிடவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x