Published : 08 Nov 2015 06:01 PM
Last Updated : 08 Nov 2015 06:01 PM
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இனிப்பு வகைகள், பட்டாசுகளுக்கு பாஜக மாநிலத் தலைமை சார்பில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக பாஜக தோல்வியைத் தழுவியதால் அனைத்து ஆர்டர்களும் காலை ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியபோது, லட்டுகள், பட்டாசுகளுக்கு ஆர்டர் அளித்திருந்தோம், ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருந்ததால் அவற்றை ரத்து செய்துவிட்டோம் என்று தெரிவித்தன.
பாஜகவை நம்பி முதலீடு செய்திருந்த வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதுகுறித்து பாட்னாவைச் சேர்ந்த வியாபாரி ரஷான் ஷா கூறியபோது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பாஜக கொடிகளை வாங்கி வைத்திருந்தேன், ஆனால் அந்த கட்சி தோல்வியை தழுவியிருப்பதால் யாரும் கொடிகளை வாங்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பாஜக கட்சி அலுவலகங்கள் முன்பு ஏராளமான பட்டாசு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகள் மாறியதால் அந்த வியாபாரிகள் தங்கள் இடத்தை உடனடியாக மாற்றி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் அலுவலகங்களுக்கு முன்பு கடை விரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT