Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

விலங்குகளை வதை செய்தால் ரூ.75 ஆயிரம் அபராதம்

புதுடெல்லி

செல்லப் பிராணிகள், விலங்குகளை அடித்து துன்புறுத்துவது, கொல்வது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த குற்றத்துக்கு தற்போது அமலில் உள்ள சட்டத்தின்படி ரூ.10 முதல் ரூ.50 வரைதான் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், 60 ஆண்டு காலமாக அமலில் உள்ள இந்தவிலங்கு வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட வரைவு ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன்படி இனி விலங்குகளை காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், ரூ.75 ஆயிரம் அல்லது விலங்குகளின் மதிப்பில் 3 மடங்கு அபராத தொகையோ அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இதற்கான புதிய சட்டத்திருத்தம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x