Published : 03 Feb 2021 10:11 AM
Last Updated : 03 Feb 2021 10:11 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,60,057 ஆகக் குறைவு

இந்தியாவில் கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,60,057 ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,77,284 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஒரு கோடியே 1,04,62,631 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 14,225 குணமடைந்துள்னர்.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,60,057 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 110 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,54,596 ஆக அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் மொத்தம் 41,38,918 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x