Published : 29 Jan 2021 04:15 PM
Last Updated : 29 Jan 2021 04:15 PM

நாடுமுழுவதும் 30 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி

புதுடெல்லி

நாடுமுழுவதும் சுமார் 30 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.71 லட்சமாக (1,71,686) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.60 சதவீதம்.

கோவிட் மொத்த பரிசோதனை இன்று 19.5 (19,50,81,079) கோடியை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 7,42,306 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணி வரை, தமிழகத்தில் 88467 பேர், புதுச்சேரியில் 1813 பேர் உட்பட, சுமார் 30 லட்சம் (29,28,053) பேர் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 5,72,060 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 52,878 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடந்துள்ளன. தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சுமார் 30 லட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 72.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 3வது இடத்தில் ராஜஸ்தானும் உள்ளன.

நாட்டில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 1.03 கோடியாக (1,03,94,352) உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,855 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 20,746 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 163 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x