உலக பொருளாதார மன்ற மாநாடு; பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் நாளை (ஜனவரி 28-ம் தேதி) காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். உலகெங்கிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

நான்காவது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்பது குறித்து பிரதமர் உரையாற்ற உள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளோடும் அவர் உரையாடுவார்.

கோவிட்டுக்கு பிந்தைய உலகத்துக்கான உலக பொருளாதார மன்றத்தின் மாபெரும் புத்தாக்க நடவடிக்கையின் தொடக்கத்தை டாவோஸ் மாநாடு குறிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in