

உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் நாளை (ஜனவரி 28-ம் தேதி) காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். உலகெங்கிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
நான்காவது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்பது குறித்து பிரதமர் உரையாற்ற உள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளோடும் அவர் உரையாடுவார்.
கோவிட்டுக்கு பிந்தைய உலகத்துக்கான உலக பொருளாதார மன்றத்தின் மாபெரும் புத்தாக்க நடவடிக்கையின் தொடக்கத்தை டாவோஸ் மாநாடு குறிக்கிறது.