Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

விவசாயிகள் பேரணியில் வேகமாக சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

நொய்டா: மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. தலைநகரின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி புறப்பட்டன. இதனை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில், டெல்லியின் சில்லா எல்லையில் இருந்து பாரதிய கிஸான் யூனியனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் டெல்லிக்குள் வந்து கொண்டிருந்தன. அப்போது, ‘சர்க்குலர்’ வழித்தடப் பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்று திடீரென நிலைத்தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், அந்த டிராக்டரை ஓட்டிவந்தவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x