Published : 24 Jan 2021 01:25 PM
Last Updated : 24 Jan 2021 01:25 PM

15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

கோப்புப் படம்

புதுடெல்லி

நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது

தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் எட்டாம் நாளில் மாலை 6 மணி வரை 15,82,201 பயனாளிகளுக்கு தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது

நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் எட்டாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கரோனா தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

27,776 முகாம்களில் 15,82,201 சுகாதார பணியாளர்களுக்கு இன்று காலை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எட்டாம் நாளான இன்று நாடு முழுவதும் 15,82,201 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 123 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x