Published : 25 Oct 2015 10:09 AM
Last Updated : 25 Oct 2015 10:09 AM
மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து நடனக் குழுவுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் வறுமையில் வாடும் நிலையில் நடனக் குழுவுக்கு பணத்தை தாரை வார்ப்பது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வரும் டிசம்பரில் நடனப் போட்டி நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிர அரசு குழுவினர் பங்கேற்க முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிதிப் பரிமாற்றத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கலை மேம்பாட்டு நிதியில் இருந்தே நடனக் குழுவுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்னா விஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT