Published : 16 Jun 2014 08:14 PM
Last Updated : 16 Jun 2014 08:14 PM
ஆந்திராவில் கடற்கரை மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. கிருஷ்ணா மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 26 பேர் பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதான விவசாயக் கூலிகள் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொடூரு மண்டலத்தில் 7 பேரும், அவனிகட்டா மண்டலத்தில் 6 பேரும், மசூலிப்பட்டிணத்தில் 4 பேரும், மற்றும் இரண்டு மண்டலங்களில் தலா 2 பேரும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. 44 டிகிரி செல்சியஸிற்குக் குறையாமல் வெயில் கொளுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT