Published : 16 Jan 2021 11:32 AM
Last Updated : 16 Jan 2021 11:32 AM

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்: மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் அதன் இயக்குநர் ரண்தீப் குலேரியாவுக்கு முதன் முதலில் தடுப்பூசி போடப்பட்டது.

புதுடெல்லி

டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இதன்காரணமாக வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்தது.

கரோனா வைரஸ்தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தமிழகம் உட்படநாடு முழுவதும் 2 கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்குதொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன

.

டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அதன் இயக்குநர் ரண்தீப் குலேரியாவுக்கு முதன் முதலில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் என பலருக்கும் தடுப்பூசி போடும் பணி போடப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x