Last Updated : 26 Oct, 2015 09:39 AM

 

Published : 26 Oct 2015 09:39 AM
Last Updated : 26 Oct 2015 09:39 AM

உற்பத்தி குறைவால் சோளம் விலை உயர்வு

உற்பத்தி குறைவு காரணமாக சோளம் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க தானிய கவுன்சிலின் இந்தியா, வங்கதேசம், இலங்கைக்கான பிரதிநிதி அமித் சச்தேவ் கூறும்போது, “இந்தியாவில் காரிப் பருவத்தில் சோளம் உற்பத்தி குறைந்துள்ளது.

இதன் காரணமாக தெலங் கானாவில் ஒரு டன் சோளம் ரூ.13,000-க்கும் ராஜஸ்தானில் ரூ.13,640-க்கும், ஆந்திரா வில் ரூ.13,520-க்கும், உத்தரப் பிரதேசத்தில் ரூ.13,830-க்கும் விற்பனையாகிறது.

பொதுவாக காரிப் பருவத்தில் தமிழகத்தில் சோளம் உற்பத்தி குறைவாகவே காணப்படும். இத னால் தமிழகத்தில் ஒரு டன் சோளம் விலை ரூ.14,730 ஆக அதிகரித் துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x