தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் திடீர் தீ: உயிர்த் தப்பினர் பயணிகள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் திடீர் தீ: உயிர்த் தப்பினர் பயணிகள்
Updated on
1 min read

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், தாள்ளபூப்பல்லி எனும் இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஜெனரல் பெட்டியில் உள்ள மின் விசிறியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இதை கவனித்த பயணிகள் பீதி அடைந்தனர். இதற்குள் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டதும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே குதித்தனர். இதனால் அவர்கள் தீ விபத்திலிருந்து உயிர்த் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புது துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக தற்காலிக மராமத்து பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் வரை இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in