இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைகிறது: 24 மணி நேரத்தில் 20,036 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைகிறது: 24 மணி நேரத்தில் 20,036 பேருக்கு பாதிப்பு
Updated on
1 min read



இந்தியாவில் கரோனா வைரஸால் 24 மணிநேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20,036 ஆக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,036 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,02,86,710 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,181 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,54,254 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 256 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,48,994 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in