Published : 30 Dec 2020 03:05 PM
Last Updated : 30 Dec 2020 03:05 PM

விவசாயிகளுடன் மத்திய அரசு 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடக்கம்

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு, விவசாயிகள் இடையே இதுவரை 5 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே டெல்லியில் இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது.

மத்திய வேளாண் துறையின் அழைப்பின் பேரில் 40 விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 4 முக்கிய கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.

‘‘புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை சட்டபூர்வமாக உறுதிசெய்ய வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பதற்காக விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்தமசோதாவை வாபஸ் பெற வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்னிறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x