Last Updated : 26 Dec, 2020 12:35 PM

 

Published : 26 Dec 2020 12:35 PM
Last Updated : 26 Dec 2020 12:35 PM

காஷ்மீரில் சுவர் இடிந்து விழுந்ததில் ராணுவ அதிகாரி, 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ராணுவ அதிகாரி, 2 ராணுவ வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள மச்செடி ராணுவ முகாமில் நேற்று மாலை நடந்த இந்தச் சம்பவம் குறித்துப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

''பில்லாவர் பகுதியில் உள்ள மச்செடி ராணுவ முகாமின் படைவீரர்களுக்கான குடியிருப்புச் சுவர் வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் ராணுவத்தினர் மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக ஒரு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சிக்கியுள்ள வீரர்கள் ஆபத்தான நிலையில் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில், ஹரியாணாவில் உள்ள சோனிபாட்டைச் சேர்ந்த ஜே.சி.ஓ எஸ்என் சிங் (45), ஜம்மு-காஷ்மீரில் சம்பாவைச் சேர்ந்த நாயக் பர்வேஸ் குமார் (39) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்''.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x