Published : 18 Oct 2015 06:41 PM
Last Updated : 18 Oct 2015 06:41 PM

நெல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இன்று 2 பேர் பலியாயினர்.

நெல்லூர் மாவட்டம், கூடூரு மண்டலம் சென்னூரு கிராமத்தை சேர்ந்த மருத்துவ கல்வி படிக்கும் திவ்யா (20) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் ஹரிதா (10) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்று இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இக்கிராமத்தில் டெங்கு மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x