Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

ஹைதராபாத் பாக்யலட்சுமி கோயிலில் பாஜக கவுன்சிலர்கள் உறுதி மொழி

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக பாஜக 150 வார்டுகளில் தனித்து போட்டியிட்டு அதில் 48 வார்டுகளில் வெற்றி பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தும், பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால், இம்முறை 35.56 சதவீத வாக்குகள் பெற்று, ஆளும் கட்சிக்கு அடுத்த இடத்தை பெற்றது ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் என தெரிய வந்துள்ளது. அதன்படி மேயர் பதவி டிஆர்எஸ் கட்சிக்கும், துணை மேயர் பதவ

இந்நிலையில் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 48 பாஜக கவுன்சிலர்கள், நேற்று பாஜக மாநில தலைவர் சஞ்சய் தலைமையில், சார்மினார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பாக்யலட்சுமி கோயிலுக்கு சென்றனர். அங்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மக்களுக்கு நல்ல சேவை புரிவோமென உறுதி எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x