Published : 17 Dec 2020 10:46 AM
Last Updated : 17 Dec 2020 10:46 AM

கரோனா பரவல்: குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு 

புதுடெல்லி

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 94,89,740 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,010 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 99,56,558 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 355 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 1,44,451 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 94,89,740 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,22,366லட்சமாகக் குறைந்துள்ளது.


உத்தர பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 56 சதவீதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x