Published : 17 Dec 2020 10:36 AM
Last Updated : 17 Dec 2020 10:36 AM

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மோடி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது: அமித் ஷா

புதுடெல்லி

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 3500 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்து மற்றுமொரு முக்கிய முடிவொன்றை மோடி அரசு எடுத்துள்ளதாக ட்விட்டர் பதிவு ஒன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மோடி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் இந்த முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமித் ஷா நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x