Published : 16 Dec 2020 11:40 AM
Last Updated : 16 Dec 2020 11:40 AM

கரோனா தொற்று; 5 மாநிலங்களில் 56 சதவீதம் பேர் பாதிப்பு

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தவரையில் 5 மாநிலங்களில் மட்டும் 56 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,382 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 99,32,548 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 94,56,449 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,32,002லட்சமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 387 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 1,44,096 ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 56 சதவீதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x