Last Updated : 14 Dec, 2020 03:34 PM

 

Published : 14 Dec 2020 03:34 PM
Last Updated : 14 Dec 2020 03:34 PM

பிரக்யா தாக்கூர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

பிரயாக் தாக்கூர் | கோப்புப் படம்.

செஹோர் (ம.பி)

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை தாக்கியதாக மம்தா பானர்ஜியை குற்றம்சாட்டிய பிரக்யா தாக்கூர் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2008 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தாக்கூர் அவரது ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுபவர்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் கண்டிக்கப்பட்ட போதிலும், பிரக்யா தாக்கூர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

மக்களவையில் நடந்த ஒரு விவாதத்தின் போது மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் (தேசபக்தர்) என்று பிரக்யா தாகூர் குறிப்பிட்டார், இது நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டனர்.

பிரதமர் மோடி பின்னர் பிரக்யா தாக்கூர் கருத்துக்களுக்காக மன்னிப்பு கோரியிருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

பிரக்யா தாக்கூர் இம்முறை ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை குற்றச்சாட்ட முயன்றவர் சர்ச்சை பேச்சில் சிக்கிக்கொண்டார்.

மத்திய பிரதேசம், செஹோர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா தாக்கூர் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தான். இது இந்தியா, பாகிஸ்தான் அல்ல என்பதை மம்தா பானர்ஜி புரிந்து கொண்டார். இந்தியாவைப் பாதுகாக்க இந்துக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு ஒரு பொருத்தமான பதிலடியைக் கொடுப்பார்கள். அந்த மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும், மேற்கு வங்கத்தில் ஓர் இந்து ராஜ்யம் அமையும்.

தனது ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதை உணர்ந்ததால் மம்தா பானர்ஜி விரக்தியடைந்துள்ளார். அதனால் அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளது.

ஒரு சத்திரியரை நாம் சத்ரிய என்று அழைத்தால் மோசமாக உணர மாட்டார். ஒரு பிராமணரை நாம் பிராமணர் என்று அழைத்தால் மோசமாக உணர மாட்டார். நாம் வைசியர்களை அவ்வாறு அழைத்தால் ஒரு வைசியர் மோசமாக உணர மாட்டார்.

ஆனால் ஒரு சூத்திரரை அழைத்தால் மட்டும் அவர் மோசமாக உணர்கிறார். காரணம் என்ன? ஏனென்றால் அவர்களுக்கு அது புரியாது.

இவ்வாறு பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x