Published : 11 Dec 2020 10:52 AM
Last Updated : 11 Dec 2020 10:52 AM

ஒரே நாளில் 29,398 பேருக்கு கரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1,42,186 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேர் மட்டுமே கோவிட் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது நாட்டில் 3,63,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.81 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேர் மட்டுமே கோவிட் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 97,96,770 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் 37,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 92,90,834 கடந்து விட்டது. குணமடைந்தோர் வீதம் 94.74 சதவீதமாக உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 414 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக 500-க்கு கீழ் உள்ளது. கரோனாவினால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,42,186 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x