ஆந்திராவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் மீது பஸ் மோதியதில் 15 பேர் பலி

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் மீது பஸ் மோதியதில் 15 பேர் பலி
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட் டத்தில் நேற்று காலை, வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற 15 பேர் உயிரிழந்தனர்.

பிரகாசம் மாவட்டம், கந்தகூரு பகுதியில் இருந்து மாலகூரு என்ற இடத்துக்கு நேற்று காலை திருமண நிகழ்ச்சிக்காக 40 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாமூருவிலிருந்து பயணிகள் இல்லாத தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் வந்தது. சர்லோபல்லி என்ற இடத்தில் இந்த பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன. பஸ் தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஸ் முற்றிலும் கருகியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வர்களில் 6 பெண்கள், 4 குழந் தைகள் உட்பட 15 பேர் இறந்தனர். மேலும் பஸ் டிரைவர் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் கந்தகூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சைக்காக ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத் துக்கு முன், திருமணம் நடைபெற இருந்த கோயிலுக்கு மண மக்கள் காரில் சென்றதால் அவர் கள் தப்பினர். தனியார் பஸ் ஓட்டு நரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தால் நேற்று நடை பெற இருந்த திருமணம் நின்று போனது. விபத்து குறித்து கந்தகூரு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் முழு விசாரணை நடத்தும் படி பிரகாசம் மாவட்ட ஆட்சியருக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோரை மாநில போக்குவரத்து அமைச்சர் சித்தா ராகவராவ் சந்தித்து ஆறுதல் கூறினார். “விபத்தில் இறந்தவர்களின் குடும்பத் தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், காயம் அடைந்த வர்களுக்கு அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in