Last Updated : 09 Dec, 2020 03:33 PM

 

Published : 09 Dec 2020 03:33 PM
Last Updated : 09 Dec 2020 03:33 PM

காற்றிலிருந்து இனி தண்ணீரைப் பிரித்தெடுக்கலாம்: கவுஹாத்தி ஐஐடி விஞ்ஞானிகள் தகவல்

காற்றிலிருந்து இனி தண்ணீரைப் பிரித்தெடுக்கலாம் என்று கவுஹாத்தியைச் சேர்ந்த ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறையால், பாரம்பரியமற்ற புதுமையான வழிமுறைகள் மூலம் தண்ணீரைச் சேகரித்துப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கவுஹாத்தி ஐஐடி விஞ்ஞானிகள் நீர்வரத்துக்கான வழிகளை வடிவமைக்க இயற்கையை நோக்கித் திரும்பியுள்ளனர்.

ஹைட்ரோபோபசிட்டி என்ற அறிவியல் முறையைப் பயன்படுத்தி காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்க முடியும் என்ற புதுமையான ஆராய்ச்சியை கவுஹாத்தி ஐஐடியில் பணியாற்றிவரும் வேதியியல் இணைப் பேராசிரியர் உத்தம் மன்னா தலைமையிலான குழு ஈடுபட்டது.

ஆராய்ச்சி அறிஞர்களான கவுசிக் மாஜி, அவிஜித் தாஸ் மற்றும் மனிதீபா தார் ஆகியோருடன் இணைந்து உத்தம் மன்னா, ராயல் சொசைட்டி ஆஃப் வேதியியல் இதழில் தெரிவித்துள்ளதாவது:

"இத்தகைய நீர் எடுக்கும் தொழில்நுட்பங்கள் சில பொருட்களின் ஹைட்ரோபோபசிட்டி அல்லது தண்ணீரைத் தனியே பிரிக்கும் தன்மை பற்றிய கருத்தைப் பயன்படுத்துகின்றன. தாமரை இலையில் தண்ணீர் எப்படி பட்டும்படாமல் உருள்கிறதோ அதேபோல ஹைட்ரோபோபசிட்டி என்ற கருத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கவுஹாத்தி ஐஐடி ஆய்வுக் குழு, முதன்முறையாக துண்டுத்தாளில் வடிவமைக்கப்பட்ட வேதியியல் கருத்தியலை ஈரமான காற்றிலிருந்து திறம்படப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தியுள்ளது. ஒரு எளிய A4 அளவு காகிதத்தின் மேல் ஒரு கடற்பாசி போன்ற நுண்ணிய பாலிமெரிக் பொருளைத் தெளிப்பதன் மூலம் ஒரு வடிவமைக்கப்பட்ட ஹைட்ரோஃபிலிக் துண்டுத்தாள் தயாரிக்கப்பட்டது.

மேலும், இரண்டு வெவ்வேறு வகையான எண்ணெயுடன் உயவூட்டுவதற்கு முன்பு வேதியியல் ரீதியாகப் பண்படுத்தப்பட்ட ஹைட்ரோஃபிலிக் புள்ளிகள் பூச்சுடன் கலக்கிறது. இந்த மேற்பரப்பு எந்தவிதமான குளிரூட்டும் ஏற்பாடும் தேவையில்லாமல் பனி / நீர் நீராவி நிறைந்த காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும்''.

இவ்வாறு உத்தம் மன்னா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x