Last Updated : 08 Dec, 2020 12:17 PM

 

Published : 08 Dec 2020 12:17 PM
Last Updated : 08 Dec 2020 12:17 PM

கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்தது: ஒட்டுமொத்த பாதிப்பு 97 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில், புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 567 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 97 லட்சத்து 3 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 27 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 91 லட்சத்து 83 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.59 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 729 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.96 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 385 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 63 பேரும், மகாராஷ்டிராவில் 40 பேரும், மேற்கு வங்கத்தில் 48 பேரும், கேரளா, ஹரியாணாவில் தலா 23 பேரும், சத்தீஸ்கரில் 21 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 20 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 14 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரத்து 55 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 26 ஆயிரத்து 399 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x