Published : 11 Oct 2015 11:26 AM
Last Updated : 11 Oct 2015 11:26 AM
சாத்வி பிராச்சி மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மாநிலங்களவை உரிமைக் குழு ஆய்வு செய்ய அவைத் தலைவர் ஹமீது அன்சாரி பரிந்துரை செய்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமன் சில மாதங்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார். இதற்கு நாடாளுமன்றத்தில் சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய வி.எச்.பி. மூத்த தலைவர் சாத்வி பிராச்சி, நாடாளுமன்றத்தில் சில தீவிரவாதிகள் உள்ளனர் என்று விமர்சித்தார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) கேசவ் ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) உள்ளிட்டோர் அவைத் தலைவர் ஹமீது அன்சாரியிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனர். இதுகுறித்து மாநிலங்களவை உரிமைக் குழு ஆய்வு செய்ய ஹமீது அன்சாரி பரிந்துரை செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT