Published : 02 Dec 2020 01:02 PM
Last Updated : 02 Dec 2020 01:02 PM

`புரெவி' புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்- 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

`புரெவி' புயல் சின்னம் மேற்கு - வடமேற்காக புயல் நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி மாலை/ இரவில் மணிக்கு 80-90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரப் பகுதியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) 2020 டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ஆங்காங்கே மிக கனமழை பெய்யக் கூடும்; டிசம்பர் 3 ஆம் தேதி தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) கனமழை பெய்யும். டிசம்பர் 2 மற்றும் 4 ஆம் தேதிகளில் தென் தமிழகத்திலும், 3 மற்றும் 4 தேதிகளில் தெற்கு கேரளாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.

வங்காள விரிகுடாவின் தென்மேற்கிலும் இலங்கை கடலோரத்தில் கிழக்குப் பகுதியிலும் ராட்சத அலைகள் எழும்
2 முதல் 5 ஆம் தேதி வரை அந்தப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் `புரெவி' புயல் சின்னம் கடந்த ஆறு மணி நேரத்தில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்காக நகர்ந்து சென்று இன்றைக்கு - டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது.

இலங்கையில் திரிகோணமலைக்கு கிழக்கு - தென் கிழக்கில் 240 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியாவில் பாம்பனுக்கு கிழக்கு - தென் கிழக்காக 470 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 650 கிழக்கு - வடகிழக்காக 650 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது மேற்கு - வடமேற்காக நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி மாலை / இரவில் புயலாக மாறி திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் முதல், 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பிறகு மேற்கு - வடமேற்காக நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் கோமோரின் பகுதியை ஒட்டி மன்னார் வளைகுடா மற்றும் குமரிமுனை பகுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டிசம்பர் 3 ஆம் தேதி மதியம் பாம்பனுக்கு மிக அருகாமையில் மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பிறகு அது மேற்கு - தென்மேற்காக நகர்ந்து, தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும்.

அப்போது மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எச்சரிக்கைகள்:

(i) மழைப்பொழிவு

தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையிலும், சில இடங்களில் மழை பெய்யக் கூடும்; டிசம்பர் 3 ஆம் தேதி தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) இதே அளவு மழை பெய்யக் கூடும். தென் தமிழகத்தில் 2 மற்றும் 4 ஆம் தேதிகளிலும், தென் கேரளாவில் 3 மற்றும் 4 தேதிகளிலும் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும்.

வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மாஹே & காரைக்கால், வடக்கு கேரளாவில் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யலாம். டிசம்பர் 4 ஆம் தேதி ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திராவில் ஆங்காங்கே கனமழை பெய்யலாம். 3 மற்றும் 4 தேதிகளில் லட்சத்தீவு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும்.
(ii) காற்று குறித்த முன்னெச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் தென்மேற்கிலும், இலங்கை கடலோரத்திலும் மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். பிற்பகலில் இருந்து இது அடுத்த 12 மணி நேரத்திற்கு 80- 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகமாக அதிகரிக்கலாம். அதன்பிறகு வேகம் படிப்படியாகக் குறையும்.
திடீரென உருவாகும் காற்று மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் குமரிமுனை பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில்) வீசும். தெற்கு கேரளாவில் டிசம்பர் 2 மாலையில் இருந்து 55- 65 கி.மீ. முதல் 75 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசும். டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு 70 - 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும் காற்று, பிறகு படிப்படியாக குறையும்.
டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் இருந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு லட்சத்தீவுகள் - மாலத்தீவு பகுதியிலும், தென்கிழக்கு அரபி கடல் பகுதியிலும் மணிக்கு 45 - 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசும்.

(iii) கடல் பகுதி நிலவரம்

வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் கடும் சீற்றத்துடன், ராட்சத அலைகள் எழும். 3 ஆம் தேதி இரவு வரையில் அதே நிலை தொடர்ந்து, பிறகு படிப்படியாக சீராகும்.
இன்று குமரிமுனைப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தமிழகம் - கேரளத்தின் தென்பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் கடும் சீற்றம் இருக்கும். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கடும் சீற்றத்துடன் ராட்சத அலைகள் வீசும்.
லட்சத்தீவுகள் - மாலத்தீவு பகுதியிலும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதியிலும் 3 முதல் 5 ஆம் தேதி வரையில் கடலில் கடும் சீற்றம் காணப்படும்.
(iv) மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று முதல் 5 ஆம் தேதி வரையில் கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

இன்றும், நாளையும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி, இலங்கை கடலோரத்தில் கிழக்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது. இன்று முதல் 4 ஆம் தேதி வரையில் குமரிமுனை பகுதி, மன்னார் வளைகுடா, தமிழகம் - கேரள தெற்குப் பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாளை முதல் 5 ஆம் தேதி வரையில் லட்சத்தீவுகள் - மாலத்தீவு பகுதி மற்றும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

புயல் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வா இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x