Last Updated : 21 Oct, 2015 11:58 AM

 

Published : 21 Oct 2015 11:58 AM
Last Updated : 21 Oct 2015 11:58 AM

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

நந்த் கங்கோலி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர சர்மாவின் மகன் ராகவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பாட்டியுடன் தோட்டத்துக்குச் சென்றான். அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

சிறுவனைக் காப்பாற்ற 40 மணி நேரம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, அச்சிறுவன் இறுந்து விட்டதாக, காவல் கண்காணிப்பாளர் வினீத் கன்னா தெரிவித்துள்ளார். குழிக்குள் விழுந்த சில மணி நேரங்களிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x