Published : 01 Dec 2020 04:35 PM
Last Updated : 01 Dec 2020 04:35 PM

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4.35 லட்சமாக குறைவு

புதுடெல்லி

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5 லட்சத்துக்கும் குறைவாக, 4,35,603 என்ற அளவில் உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.60 சதவீதம்.

தினசரி பாதிப்பைவிட, தினசரி குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 11,349 குறைந்துள்ளது. 31,118 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41,985 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை, 88,89,585 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 93.94 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x