Last Updated : 26 Nov, 2020 03:44 PM

 

Published : 26 Nov 2020 03:44 PM
Last Updated : 26 Nov 2020 03:44 PM

சீன எல்லையைக் கண்காணிக்க இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து ட்ரோன் வாங்குகிறது இந்தியா

சீன எல்லையைக் கண்காணிக்க இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேலிடமிருந்து ஹெரான் ரக ட்ரோன்களையும், அமெரிக்காவிடமிருந்து மினி ட்ரோன்களையும் பெறவுள்ளது.

ஹெரான் கண்காணிப்பு ட்ரோன்களை வாங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. டிசம்பரில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். கிழக்கு லடாக் பகுதியில் சீன எல்லையை ஒட்டிய இடங்களில் இவை பயன்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த ட்ரோன்களை வாங்குவதற்கான நிதியை பிரதமர் மோடி அவசர நிதி அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்துள்ளார். ரூ.500 கோடி செலவில் இந்த ட்ரோன்கள் வாங்கப்படவுள்ளன.

அதேபோல், அமெரிக்காவிடமிருந்து மினி ட்ரோன்கள் பெறப்படுகிறது. அவை மற்ற படைவீரர்களுக்கு வழங்கப்படும்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில் இந்திய ராணுவம் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த முறை பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பின்னர், ராணுவ வீரர்களுக்கு இதுபோன்று கண்காணிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x