Published : 22 Oct 2015 08:07 AM
Last Updated : 22 Oct 2015 08:07 AM
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எப்போது கூட்டுவது என்பதுதொடர்பான இறுதி முடிவு வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி, சதானந்த கவுடா உள்ளிட்டோர் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக் கான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படலாம். ஆனால், இறுதி முடிவு, வரும் 26-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர வைக் குழு கூட்டத்தில் எடுக்கப் படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT