இமாச்சலில் மாடு கடத்தியதாக ஒருவர் கொலை

இமாச்சலில் மாடு கடத்தியதாக ஒருவர் கொலை
Updated on
1 min read

இமாச்சலப் பிரதேசம் சிம்லா அருகே சராஹான் கிராமத்தில் நோமன் என்பவர் பலத்த காயங்களுடன் ஒரு லாரிக்குள் கிடந்தார். அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.

நோமனுடன் சென்ற உறவினர் இம்ரான் அஸ்கர் கூறும்போது, `மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியில் தாங்கள் பயணித்ததாகவும், அந்த லாரியை வழிமறித்த பஜ்ரங்கள் தொண்டர்கள் நோமனை அடித்து உதைத்ததாகவும்’ தெரிவித்துள்ளார்.

அந்த லாரியில் இருந்த நால்வரை, பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இமாச்சலப் பிரதேச காவல் துறையினர் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in