Published : 17 Nov 2020 03:42 PM
Last Updated : 17 Nov 2020 03:42 PM

கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை: மொத்த பாதிப்பில் 5.11 சதவீதமாக குறைந்தது

புதுடெல்லி

நாட்டில் தற்போது கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,53,401 -ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 5.11 சதவீதமாகும்.

கடந்த 2 நாட்களாக, தினசரி கரோனா பாதிப்பு சுமார் 30,000 என்ற அளவில் பதிவாகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 29,163 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே, தினசரி தொற்று பாதிப்பு 50,000க்கும் குறைவாக உள்ளது.

ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், நம் நாட்டில் கோவிட்டுக்கு ஏற்ற நடவடிக்கைகளைப் பரவலாக பின்பற்றுவதால், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினசரி தொற்று பாதிப்பை விட, தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,791 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு, கொவிட் பரிசோதனையை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகளவில் மேற்கொண்டு வருகிறது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை இன்று 12,65,42,907 -ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டு மொத்த தொற்று பாதிப்பை 7.01 சதவீதமாகக் குறைத்துள்ளது.

நாட்டில் தற்போது கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,53,401 -ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 5.11 சதவீதம்.

நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82,90,370 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் தற்போது 93.42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 78.40 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x