Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

10 நாளில் கரோனா கட்டுப்படுத்தப்படும்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நம்பிக்கை

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், டெல்லியிலும், கேரளாவிலும் மட்டும் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

டெல்லியில் கரோனா பரவல் அதிகரித்திருப்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த வாரம் முதலாக மேலும் பல தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதன்படி, 7 முதல் 10 நாட்களுக்குள் கரோனா பரவல் டெல்லியில் கட்டுப்படுத்தப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x