கரோனா தொற்று: தொடர்ந்து 5வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

கரோனா தொற்று: தொடர்ந்து 5வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு
Updated on
1 min read

தொடர்ந்து 5வது நாளாக, புதிதாக கோவிட் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், 47,905 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தொடர்ந்து 40வது நாளாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52,718 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டின் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,89,294 ஆக உள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் குணமடைந்தோர் வீதம் 92.89%மாக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,66,501 ஆக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் உள்ள இடைவெளி 75,77,207 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 550 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 1.48%-ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in