Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

தொழில் துறை பாதிக்காத வகையில் விவசாயிகள் போராடலாம்: பஞ்சாப் தொழிலதிபர்கள் வேண்டுகோள்

நாட்டின் மிகப்பெரிய குளிர்கால ஆடைகளுக்கான சந்தையாக விளங்கும் லூதியானாவில், சரக்குரயில்கள் மற்றும் பயணிகள்ரயில்கள் நிறுத்திவைக்கப்பட் டுள்ளன.

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள சந்தை, இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. லூதியானாவைச் சேர்ந்த தொழில்துறையினர் மத்திய, மாநிலஅரசுகளிடம் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர்.

அதேசமயம் விவசாயிகள் தொழில் துறையின் நடவடிக்கைகளைப் பாதிக்காத வகையிலான போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடுவது எல்லாம் சரிதான். ஆனால் ரயில்களை ஓடவிடாமல் தடுப்பது முறையல்ல என்று கூறியுள்ளனர்.

சர்ஜீவன் நிட்வேர் நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்ஷன் ஜெயின் கூறுகையில், ‘‘லூதியானாவின் உள்ளாடை மற்றும் ஆயத்த ஆடை துறையில் 20 ஆயிரம் யூனிட்டுகள் உள்ளன. இங்கிருந்துதான் நாடு முழுமைக்குமான குளிர்கால ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இவை போக ஏற்றுமதியும் செய் யப்படுகின்றன.

ஆனால், இந்த ஆண்டு மொத்த விற்பனை ரூ.5 ஆயிரம் கோடியைத் தாண்டாது போலிருக்கிறது. முந்தைய ஆண்டில் விற்பனையான அளவில்இந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி தயாராக உள்ளது. ஆர்டர்கள் வெகுவாககுறைந்துவிட்டன.

காரணம், ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளன. ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டதால் விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனால் பாதிக்கப்படுவது தொழில்துறையும் அதை நம்பியிருக்கும் சாமானியர்களும்தான்” என்றுஅவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x